கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று தொடக்கம்

கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் அனைத்து மாணவர்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேபோல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அவர்களுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆக சுமார் 10 மாதங்களுக்கு பிறகு, மாணவ-மாணவிகள் நேரடி வகுப்பறை அனுபவத்தைப் பெற இருக்கின்றனர்.