நாளை பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் – முதல்வர் பழனிசாமி!

எடப்பாடி தொகுதியில் இருந்து நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்றுஆலோசனையில் ஈடுபட்டார்.இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், அவர் கூறுகையில்,லாரிகளில் பொருத்தக்கூடிய ஜிபிஎஸ் கருவி, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்கவில்லை. இது மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் கண்டுள்ளதால் மக்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, விலை குறைக்க வேண்டி மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என கூறினார்.