கரோனா கால ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் ரத்து – முதல்வர் பழனிசாமி !

கரோனா தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பொது மக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் சிறுவழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் தொடரப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார் .அவர் பேசியது,மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மேலும் தொற்று குறித்து பல கட்டுப்பாடு சட்டங்களை அரசு விதித்தது.

இந்த அரசின் உத்தரவுகளை மீறியவர்கள், கொரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். மொத்தம் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவற்றில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள், இ-பாஸ் முறைகேடு வழக்குகள், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும். .