தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரிப்பு

கொரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவு நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது 2020-ம் ஆண்டு மே மாதத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று நமது நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டாக மிரட்டி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும், இதனைப் பயன்படுத்தி சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, திருமணம் செய்துவைத்துள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது.

கடந்தாண்டு முதல் தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா காலத்தில் குழந்தைத் திருமணம் குறித்த புகார்கள் அதிகம் வந்தன. இது தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது.