கொரோனா சிகிச்சை வார்டில் முதல்வர் ஸ்டாலின்

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டிற்காக 50 கார் ஆம்புலன்ஸ்களை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை வார்டில் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

நோயாளிகளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த ஸ்டாலின், சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஸ்டாலினுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பிபிஇ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை வார்டில் ஆய்வு செய்தார்.