MK Stalin: தி.மு.க. ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர்- மு.க.ஸ்டாலின்

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

MK Stalin: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொமுவாரி பகுதியில் ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் நேரில் சென்று திறந்து வைத்தார்.

அந்த வளாகத்தில் பெரியாரின் உருவச்சிலையை ம் திறந்து வைத்து மரியாதை செய்தார்.

அதன்பிறகு ஒழுந்தியாம்பட்டு பகுதிக்கு சென்று 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.24.77 கோடி மதிப்பில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்தும் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் இந்த அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறது. இன்று உங்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். இங்கு தாய்மார்களிடம் சில கேள்விகள் கேட்டேன். இப்போது நடைபெற்று கொண்டிருக்கிற இந்த 10 மாத கால தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த ஆட்சி ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் எந்த குறையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறோம் என்று கூறினார்கள்.

இதையும் படிங்க: gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை

இது தொடரும். தொடர வேண்டும். அப்படி தொடர வேண்டும் என்பதற்காக உறுதி எடுத்துக் கொள்ளக் கூடிய, நிறைவேற்றக் கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை

நான் உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியபோது கலைஞர் என்னை பாராட்டினார். மக்களோடு மக்களாக நெருக்கமாக இருக்கக் கூடிய துறை உள்ளாட்சி துறை. இந்த துறை அப்போது எப்படி வேகமாக செயல்பட்டதோ அதேபோல் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையும் வேகமாக செயல்படுகிறது.

அதனால் தான் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவிக்கின்றனர்.

பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவிற்கு முன்னேறி இருக்காது. அதனால் தான் பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றவே சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.

அந்த திட்டம் மீண்டும் இப்போது சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: petrol price hike : உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை