Women Auto driver: முதியோருக்கு இலவச ஆட்டோ சேவை

chennai-women-auto-driver-raji-ashok-offers-free-ride
இலவச ஆட்டோ சேவை

Women Auto driver: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசிக்கின்றனர். அதில், அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட தேவைகளுக்காக சுமார் 10 லட்சம் பேர் ஷேர் ஆட்டோர் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாவை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு லட்சம் ஆட்டோ இயங்கி வருகிறது.

இவை தவிர அரசு பேருந்து, புறநகர் மின்சார ரயில் உள்ளிட்டவைகள் மூலம் நடுத்தர மக்கள் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு பொதுப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தனியார் நிறுவங்களில் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

அதன் பிறகு சுமார் 3 மடங்கு இருசக்கர வாகனம் சென்னையில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரண்டாவது ஓணர் என்று சொல்லக்கூடிய செகண்ட் ஹேண்ட் பைக்குகள் விற்பனை அதிகரித்ததை இருசக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: MLA Roja: ஆந்திராவில் நடிகை ரோஜா அமைச்சராக வாய்ப்பு

சென்னை நகர வாசிகள் தங்களது தேவைக்காக பல்வேறு விதங்களில் பயணம் செய்து வரும் நிலையில், ஆட்டோக்களின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கோயம்பேடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதிகளில் ஆட்டோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழக அரசு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் அறிவித்த பிறகு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பி.ஏ பட்டதாரியான பெண் ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக்(50) மகளிர் மற்றும் முதியோருக்கு இரவு 10 மணிக்கு மேல் இலவசமாக சேவை அளித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மருத்துவமனை செல்வதற்கான அவசர தேவைக்கு 24 மணிநேரமும் இலவச சேவை வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமூக சேவகி ராஜி அசோக்.

கேரளாவில் இருந்து தனது கணவருடன் சென்னைக்கு குடிபெயர்ந்த ராஜி அசோக், 23 ஆண்டுகளாக சென்னையில் ஆட்டோ ஓட்டி வருவதாகவும், அதன் மூலம் நிறைவான வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்தார். மேலு, சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்