Delhi Fire: குடிசையில் ஏற்பட்ட தீ 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு

Delhi Fire : டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அப்போது அவர்களால் ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

Delhi Fire: குடிசையில் ஏற்பட்ட தீ 7 பேர் உடல் கருகி உயிரிழப்பு

மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியின் கூடுதல் DCP கூறுகையில்:”கோகுல்புரி PS பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக குழுக்கள் அனைத்து மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நாங்கள் தீயணைப்பு துறையையும் தொடர்பு கொண்டோம்.அதிகாலை 4 மணிக்குள் எங்களால் தீயை அணைக்க முடிந்தது.எனினும்,30 குடிசைகள் எரிந்தன மற்றும் 7 பேர் பலியாகியுள்ளனர்”,என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: MLA Roja: ஆந்திராவில் நடிகை ரோஜா அமைச்சராக வாய்ப்பு