Chennai metro water: 4 நாளைக்கு தண்ணீர் வராது

Chennai Metro water: குடிநீர் வினியோகம் 4 நாட்களுக்கு நிறுத்தப்படுவதால் தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுரை

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

சென்னை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வருகிற 8ம் தேதி காலை 8 மணி முதல் 11ம் தேதி காலை 11 மணி வரையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக வடசென்னை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக புழலில் உள்ள 300 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை குடிநீர் வழங்கப்பட இருக்கிறது.

இதனால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் தேவைப்படுவோர் 8144930901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மணலிக்கு 8144930902, மாதவரத்திற்கு 8144930903, வியாசர்பாடி பட்டேல் நகருக்கு தலைமை அலுவலக புகார் பிரிவு எண்கள் 044-45674567, 044-2845 1300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: