கரோனா தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது.இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு மே 3-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளன.
மற்றும் மே 17-ம் தேதி முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் முடிவடையாததால், தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்காது என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும், மே 10-ம் தேதி முதல் தொடங்கவிருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை ஐ.ஐ.டி.யும் அறிவித்துள்ளது.