சென்னை எழும்பூர் – திருச்சி இடையே அக்.7ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்-தெற்கு ரயில்வே

சென்னை எழும்பூர் – திருச்சி இடையே அக்.7ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சி – சென்னை எழும்பூர் இடையே அக்டோபர் 26ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருச்சியில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.