ADMK winning candidate: வெற்றி செய்தியை கேட்டு கதறி அழுத அதிமுக வேட்பாளர்

கதறி அழுத அதிமுக வேட்பாளர்

ADMK winning candidate: வெற்றி அறிவிப்பை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த உடன் தன்னை மறந்து கண்கலங்கி அதிமுக வேட்பாளர் சத்தியநாதன்

வெற்றி அறிவிப்பை கேட்டு கதறி அழுத அதிமுக வேட்பாளரால் தேர்தல் அதிகாரிகள் திகைத்துப்போயினர்.

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 11 உட்பட்ட 13 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மதுரவாயல் அடையாளம்பட்டு எம்ஜீஆர் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில் 145 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சத்தியநாதன் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஆலன் என்பவரை விட 1,895 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும் அந்த அறிவிப்பை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த உடன் தன்னை மறந்து கண்கலங்கி அ.தி.மு.க வேட்பாளர் சத்தியநாதன் அதிகாரிகள் முன் இரு கை கூப்பி கதறி கதறி அழுததும் அங்கிருந்த அதிமுகவினர் அவரை உற்சாகப்படுத்தினார். பின்பு வெற்றி சான்றிதழைப் பெற்ற கொண்டு வெளியே வந்த வெற்றி வேட்பாளர் சத்யநாதனை அக்கட்சியினர் தோளில் தூக்கி ஆரவாரம் செய்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி வெளியே வந்ததும் முன்னாள் அமைச்சர் பென்சமின் அங்கு வரவே அவரிடம் வெற்றி பெற்ற சான்றிதழை காட்டி அ.தி.மு.க வேட்பாளர் சத்தியநாதன் வாழ்த்துக்கள் பெற்றார். மேலும் வெற்றி அறிவிப்பைக் கேட்டவுடன் கதறி அழுத அ.தி.மு.க வேட்பாளரை பார்த்து கொஞ்ச நேரம் தேர்தல் அதிகாரிகள் திகைத்தனர். மொத்தமாக சத்தியநாதன் 6,152 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ADMK winning candidate cried after knowing the results

இதையும் படிங்க: Valimai: மளிகை பொருட்கள் வாங்கினால் பாப்கார்னுடன் வலிமை டிக்கெட் இலவசம்