rain in tn : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.பருவமழை காரணமாக தமிழகத்தில் மிகுதியான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.rain in tamilnadu

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு டலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.