தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜூலை 4-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுவது,வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை ,தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் வருகின்ற 4ஆம் தேதி வரை தென் மேற்கு , மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கபட்டுள்ளது.