தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.
டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பின் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் !