6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில்,6 மாவட்டங்களில் கனகமழைக்கு பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு , எனவும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்றும் கடலோர மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.