வருகிற 19-ந் தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும், 21-ந் தேதி ராஜ்நாத்சிங்கும் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்கள்.
அதைதொடர்ந்து கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நீலகிரி வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து விழுப்புரம் செல்கிறார். அங்கு பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புதுவை மாநிலம் செல்கிறார். அங்கு பா.ஜனதா பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
ஒரே நாளில் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா அன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.