தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில்,பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை விரைந்துள்ளது.
மத்திய உள்துறை இணைசெயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்தது
சென்னையில் வெள்ள சேதத்தை பார்வைட்ட மத்திய குழுவினர் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் சாலை பகுதியை ஒட்டிய வரதராஜபுரத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர்.