School Students: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்டு அதன் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வுக்கான கால அட்டணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பருவ தேர்வுகான பாடவாரியான தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cbse.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10வது மற்றும் 12வது வகுப்புகளுக்கான பருவம் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.சோனியாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மம்தா… மோடிக்கு குட்டு!சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத் தேர்வை எழுதியிருந்தனர். இந்த நிலையில் தற்போது இரண்டாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: China impose Lockdown: மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு



