சூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி வழக்கு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி சேர்ந்த மணி தணிக்கைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை தடை செய்ய வேண்டும் என்று மனு செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் துணைவேந்தராக சூரப்பா பணிபுரிந்து வருகிறார். இவர் மீதும் மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது முதல்வர் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ 200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் தலா 13 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.