யூடியூப்களில் வலம் வரும் ஜி.பி. முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் !

முன்பெல்லாம் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மட்டும் மக்களின் பொழுபோக்காக இருந்து வந்தன.தற்போது சமூகவலைத்தளங்கள் அதிகம் வந்து விட்டது.மேலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் யூடியூபர்கள் அதிகம் ஆகிவிட்டனர்.

பிரபல யூடியூபர்கள் ஜி.பி.முத்து, பேபி சூர்யா மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திரைத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.காதல் பட காமெடி நடிகர் சுகுமார்,சிரிக்கோ உதய உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அவர்கள் கூறியது,இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குழந்தைகள் இணையம் மூலம் பயின்று வருகின்றனர்.

ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா போன்றவர்கள் ஆபாசமாக பல்வேறு காணொலிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.இதனை லட்சக்கணக்கானோர் கண்டு பகிர்கின்றனர்.

இந்த காணொளிகள் மூலம் சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும்.மேலும் திரைத்துறையில் தணிக்கைக்குழு இருப்பது போல சமூகவலைத்தளங்களுக்கும் வேண்டும் என்று கூறினார்.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.