பிரபல கர்நாடக இசைப் பாடகியான நித்யஸ்ரீ பிறந்தநாள் இன்று !

நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாற்றில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார்.மேலும் இவர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் பேத்தி ஆவார்.

இசைக் குடும்பத்தில் வளர்ந்த இவர் தனது 16வது வயதிலேயே இசைக் கச்சேரியை அரங்கேற்றியவர்.கர்நாடக சங்கீத வல்லுனராக மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடியுள்ளார்.

1990-ல் ‘ஜீன்ஸ்’ படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து மின்சாரக் கண்ணா, சவுக்கியமா கண்ணே சவுக்கியமா போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

கலைமாமணி விருது, பெஸ்ட் கான்செர்ட் விருது, பெஸ்ட் பெர்ஃபாமிங் ஆர்டிஸ்ட், பத்ம சாதனா, நாத கோவிதா, இசைக்கனல், கானம்ரிதாகலாரசனா, இசைக்கலைத் தாரகை, இன்னிசை மாமணி போன்ற எண்ணற்ற விருதுகளை வாங்கியுள்ளார்.