ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு !

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இருதரப்புக்குமிடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தாலும் பாதுகாப்புப் படை வீரர்களையும், காவல் துறையினரையும் குறிவைத்து தாலிபான் அமைப்பு தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்திவருகிறது.

தலைநகர் காபூலில் பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் திடீர் என காரில் இருந்து பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.கடந்த சில மாதங்களாக காபூலின் தலைநகரில் நடத்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.