3வது முறையாக வெற்றி கண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது.கனடாவை ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கனடாவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது நடைபெற்ற பொதுதேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. கனடாவை ஆளும் லிபரல் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்த கொரோனா தொற்று காலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவை சிறப்பாக வழிநடத்தினார்.மேலும் அங்கு 15 லட்சம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்ற நாடுகளை பொறுத்த வரை கனடாவில் பாதிப்பு குறைவு.

இதையும் படிங்க : நிலம் இல்லா ஏழை மக்களுக்கு நிலம் !