இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனி விமானத்தில் தன் குடும்பத்தினருடன் சென்னை வந்து, இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருடன் தனி விமானத்தின் மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்திறங்கினர். பின்பு அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.