இன்று முதல் பேருந்து சேவை தொடக்கம்..

தமிழகம் முழுவதும் இன்றுமுதல் பொது போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. கொரோனா 2 வது அலை காரணமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தநிலையில் தற்போது முழு அளவில் பேருந்து சேவை தொடங்கவுள்ளது.

முன்னதாக சில மாவட்டங்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது அனைத்து மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து தொடங்க உள்ளது.

அதேநேரம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

1. 50 சதவீத இருக்கைகளில் மட் டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

2. குளிர்சாதன பேருந்துகளை குளிர்சாதன வசதியின்றி இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.