Bus Accident: அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து
அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து

Bus Accident: சிதம்பரம் புறவழிச்சாலையில் அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கண்டக்டர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் ஒன்றின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மனோகரன்(60), கண்டக்டர் ராமதாஸ் (39) இருவரும் படுகாயமடைந்தனர்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த கலியபெருமாள் (57), கலா (35), முருகவேல் (38) மற்றும் காளியப்பன் (52) ஆகிய 4 பயணிகளும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Actor Balaji: மனைவி மீது நடிகர் பாலாஜி புகார்..!