பிரிட்டன், COVID-19 சிகிச்சைக்கான molnupiravir மாத்திரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Merck, Ridgeback Biotherapeutics ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அந்த மாத்திரைக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு பிரிட்டன்.
COVID-19 பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதியான உடனே அல்லது கிருமித்தொற்று அறிகுறி தென்பட்ட 5 நாளுக்குள் அந்த மாத்திரையை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் அந்த மாத்திரை Lagevrio என்ற பெயரில் வெளியிடப்படும்.
கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயமுடையோர், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான அல்லது இறந்துபோகும் சாத்தியத்தை, அந்த மாத்திரை பாதியாகக் குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
480,000 molnupiravir மாத்திரைகளைப் பெறச் சென்ற மாதம் Merck நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது பிரிட்டன்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு