3 மாதங்களில் திமுக.,வினர் தங்களை மாற்றிக்கொள்வார்கள்

எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்த திமுக.,வினர் இப்போது புரிந்து கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவதை போல, இன்னும் 3 மாதங்களுக்குள் வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் தங்களை மாற்றிக்கொள்வார்கள்,’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை, கேஸ் விலை உயரும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையை மிக விரைவாக முறைப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மிக வேகமாக இந்த விலை கட்டுக்குள் வரும். இந்த விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்