நிஷாவிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய கமல்

இந்த வாரம் நடைபெற்ற புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனா – நிஷா இடையே ஏற்பட்ட பிரச்னையை கையிலெடுத்துள்ளார் கமல் ஹாசன். முன்னதாக இந்த வாரம் நடைபெற்ற ‘புதிய மனிதா’ டாஸ்க்கில் அர்ச்சனா ரோபோவாக இருந்த போது அவரது உணர்ச்சிகளை வெளிக் கொண்டுவருவதற்காக, அர்ச்சனாவின் தந்தை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதாவது உங்கள் தந்தை இறந்துவிட்டதாக கூறிய தருணம் உங்களுக்கு எப்படி இருந்தது? அவரது இழப்பை எப்படி சமாளித்தீர்கள்? உங்கள் தந்தை உங்களிடம் கூறிய கடைசி வார்த்தை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டார்.

இது அர்ச்சனாவை புண்படுத்தியது மட்டுமன்றி, பார்ப்பவர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இந்த நிலையில் கமல், நிஷாவை கடுமையாக பேசுவது ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. இதனிடையே இன்று வெளியேறப்போகும் நபர் ஜித்தன் ரமேஷ் தான் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.