என்னது பிக்பாஸ் வீட்டிலிருந்து இவர் வெளியேற்றப்பட்டாரா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்த ஆஜித்தின் அம்மாவும், சகோதரியும் ஆஜித் அமைதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து விழித்துக் கொண்ட ஆஜித், தனது விளையாட்டை ஆட ஆரம்பித்த சமயத்தில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்னும் நிகழ்ச்சி முடிவடைய இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் பாலா, ஆரி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆரி டைட்டில் வெல்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேம் என்று தெரிவித்த பாலாஜி, இதுவரை டைட்டில் வென்றவர்கள் அனைவரும் அமைதியாக கடலை சாப்பிட்டவர்கள் தான் என்று குற்றம்சாட்டினார்.

கேபி, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ, பாலா, ஆரி ஆகிய 7 பேர் தற்போது களத்தில் இருக்கும் நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. ஏழு பேரில் நடிகர் ஆரிக்கு அதிகமான ஆதரவு இருப்பதையும் சமூகவலைதளங்களில் காண முடிகிறது.