தமிழ்நாடு பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய மாநிலம்..!

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்ததால் தமிழ்நாடு தப்பிப் பிழைத்துள்ளது என இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவரான மனோ கணேசன், இலங்கையில் பிறந்தவர் என்றபோதும் தமிழ்நாடு தொடர்பான தகவல்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருபவர். சமூக ஊடகங்களில் மனதில் பட்டதை பதிவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் இவர், ரஜினியின் அரசியல் கைவிடல் அறிவிப்புக்கு பிறகு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீளமான கட்டுரையை எழுதியிருக்கிறார். அதை இங்கே வழங்குகிறோம்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாடு, பல வட இந்திய மாநிலங்களை விட முன்னேறிய ஒரு மாநிலம்.

வட இந்தியாவில், டெல்லி, மும்பாய், கொல்கத்தா, சண்டிகர், அஹமதாபாத் ஆகிய மாநகரங்களை சுற்றிய பகுதிகளில் மட்டுமே “முன்னேற்றம்” தெரியும்.