பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இணையும் மூன்று முக்கிய நபர்கள்!

கரோனா பரவலை தடுத்திட, ஜோ பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் மூன்று நபர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நாடு முழுவதும் கோவிட் 19 பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலையில், ​​எனக்கு ஆலோசனை வழங்கவும் மாறுபட்ட கண்ணோட்டங்களை கூறவும் குழு தேவைப்படுகிறது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஹாப்கின்ஸ், டாக்டர் ஜிம் மற்றும் டாக்டர் மைக்கேல்ஸ் ஆகியோர் குழுவின் பணிகளை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி எங்களின் COVID-19 திட்டமிடலில் சுகாதார விளைவுகளிலும், பணியாளர்களிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.