கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த அரசு அனுமதித்துள்ளதா ?

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி, மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியினை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கடந்த ஜூலை 1ஆம் தேதி அனுமதியளித்தது.

முன்னதாக, மத்திய வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்தினை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.