புத்தாண்டு தினத்தன்று 18 பேர் படுகொலை !

crime-father-arrested-for-setting-fire-on-own-son-family-with-house-in-kerala
மகன் குடும்பத்துக்கு தந்தை செய்த கொடூர செயல்

மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஹோண்டுராஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதைப்பற்றி காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2019ஆம் ஆண்டு, நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 24 பேர் கொல்லப்பட்டனர். அதனை ஒப்பிடுகையில் இந்த முறை குறைவாகவே பதிவாகியுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு, 3,482 வன்முறை தொடர்பான படுகொலைகள் நிகழ்ந்தன. 2019ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 82 படுகொலைகள் பதிவாகின. 2020ஆம் ஆண்டு, ஒரு லட்சம் பேரில் 37 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 2019ஆம் ஆண்டு, ஒரு லட்சம் பேரில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.