8 வயது சிறுமியை சீரழித்தவனுக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை பெசன்ட்நகர் திடீர் நகரைச் சேர்ந்தவன் தட்சிணாமூர்த்தி (45). 2016-ல் அதே பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கை விசாரித்தது.

இந்த நிலையில் தட்சினாமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.