பிபிசி செய்திகளுக்கு சீனாவில் அதிரடி தடை !

பிரபலமான பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதாக நேற்று இரவு அறிவித்திருக்கிறது.கரோனா வைரஸ் தொடர்பான சீனா அரசு நடவடிக்கைகள் மற்றும் சீனாவை பற்றி உண்மைக்கு மாறான செய்திகளை பிபிசி வெளியிடுவதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற ஒளிபரப்பால் தங்கள் நாட்டின் ஒற்றுமை குறையப்படும் என்று குற்றம் சாட்டியுள்ளது.இந்த சீனா தடை குறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்றும் அச்சமன்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.