வரும் 13ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களின் டூவீலர் பறிமுதல்

வரும் 13ம் தேதி முதல், ஹெல்மெட் அணியாதவர்களின் டூவீலரை பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் கூறியதாவது: “தற்போது டூவீலர்களில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும், 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 13ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனத்தை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என, எஸ்பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை