பாஜக நிர்வாகி துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் பாஜக நிர்வாகி ஒருவரை தனது துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக நேற்று ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர் பொன்ராஜ் ஜெபமணி. இவர் தற்போது அப்பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜெபமணி, அவரைத் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அவருக்கு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த நிர்வாகி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் ஜெபராஜ் மற்றும் அவரது மகனைக் கைதுசெய்துள்ளனர்.