மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மே மாதம் நடைபெறவுள்ள ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வின்போது மாணவர்கள் இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.