PM Modi: டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு

PM Modi: ஆந்திர மாநிலத்தின் முதல் மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது, போலவரம் பாசனத் திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.55,000 கோடி உள்பட பல்வேறு திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள ஒதுக்கீடுகளுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்-2014 ன் பல விதிகள் இன்னும் செயல்படுத்தப்படாதது குறித்து பிரதமர் மோடியிடம் அவர் எடுத்துரைத்தார். மேலும், தெலுங்கானா மற்றும் ஆந்திரா இடையே ஜூன் 2014-ல் மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து நிலுவையில் உள்ள மின்சார பாக்கிகள் தொடர்பான சர்ச்சையை தீர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: LPG cylinder price : சிலிண்டர் விலை உயர்வை குறித்து கண்ணீர் அஞ்சலி