இரண்டாவது நாளாக மேற்கு வங்கத்தில் அமித் ஷா

மத்திய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவிவரும் சூழலில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் முன்னதாகத் தாக்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று (டிச.19) மேற்கு வங்கம் சென்றடைந்தார்.

நேற்று (டிச.19) பல இடங்களில் பரப்புரை மேற்க்கொண்ட அவர், இன்று (டிச.20) சாந்தினிகேத்தனில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். பின்னர், ரவீந்திரா பவனில் உள்ள ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செய்கிறார்.

தொடர்ந்து, போல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பேரணி மற்றும் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.