நடிகர் அஜித் குமாரின் அன்பான வேண்டுகோள் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் ஒருவர் நடிகர் அஜித் குமார்.மற்ற நடிகரை விட தனித்துவமாக இருப்பவர்.பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு கொள்ளமாட்டார்.

இவருக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். ரசிகர்கள் இவரை தல என்று அன்போடு அழைப்பார்கள்.தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.

அதில், ‛‛மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு… இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், அஜித் அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.