மீண்டும் தனது தாக்கத்தை அதிகரிக்கும் கரோனா – இந்தியா !

கரோனா தொற்றுக்கு நம் நாட்டில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில்,கரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,38,734 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 188 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,044 ஆக உயர்ந்துள்ளது.