மீண்டும் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி – கர்நாடகா !

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் அந்தந்த மாநிலச் சூழலுக்கு ஏற்ப அரசுகள் புதிய ஊரடங்கு, கட்டுப்பாடு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

கர்நாடக மாநிலத்திலும் தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அங்கு ஜிம், நீச்சல் குளங்கள் மூடப்படுகின்றன.

போராட்டங்கள், பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது. மற்றும் கரோனா தொற்று குறைந்ததால் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.தற்போது கரோனா தொற்று மீண்டும் பரவுவதால் திரையரங்குகளில், பார்களில், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.