ஆப்கனில் அனைத்தும் முடிந்துவிட்டது- ஆப்கன் எம்.பி

ஆப்கனில் அனைத்தும் முடிந்துவிட்டது; எங்களின் நிலை பூஜியம்,” என டில்லி வந்த ஆப்கன் எம்.பி., கூறினார்.

இந்திய விமானப்படையினரால் மீட்கப்பட்டு டில்லி அழைத்து வரப்பட்ட எம்.பி.,க்களில் ஒருவரான நரேந்தர் சிங் கல்சா கூறுகையில், எனக்கு அழுகை வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனை மறுகட்டமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தற்போது அனைத்தும் முடிந்துவிட்டது. எங்களின் நிலை பூஜியம் தான். எங்களை மீட்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

விமான நிலையத்திற்கு தொடர்ந்து வந்தோம். தலிபான்கள் கொடூரமானவர்கள்.

காட்டுமிராண்டிகள். அங்கு நாங்கள் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. விமான நிலையத்திலும் கூட ஏன் செல்கிறீர்கள்?. போகாதீர்கள்? என்றனர். இவ்வாறு எனக்கூறினார்.