நாளை முதல் 400 மாநகர பஸ்கள் இயக்கம்

bharat-bandh-additional-buses-will-run-in-tamil-nadu
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

நாளை முதல் பஸ்களில் நின்று பயணம் செய்வதற்கு அனுமதி இல்லை. அரசின் உத்தரவை பின்பற்றி அனைத்து டிரைவர், கண்டக்டர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மக்கள் பஸ்களில் கூட்டமாக ஏறுவதை கண்டக்டர்களால் கட்டுப்படுத்துவது சிரமம். இதனால் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அதிக பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுக்கும் போது தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறு சிறு பிரச்சனைகளை கண்டக்டர்கள் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

அதனால் சென்னையில் அதிக கூட்டம் நெரிசல் மிகுந்த வழித்தடங்களை கண்டறிந்து அந்த பகுதியில் கூடுதலாக மாநகர பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். நாளை முதல் கூடுதலாக 400 பஸ்கள் இயக்கப்படும்.

எந்தெந்த வழித்தடங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள் என்பதின் அடிப்படையில் அந்த வழித்தடத்தில் பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். குறிப்பாக காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.