நடிகை சமந்தா மறுத்த ரூ.200 கோடி ஜீவனாம்சம் !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவருக்கும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன் இருவருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் உள்ளன.

இவர்கள் திருமணத்தை பற்றி அவ்வப்போது கருத்துக்கள் வெளியாகின.ஆனால் இது குறித்து இவர்கள் இருவரும் வாய்திறக்கவில்லை.இந்நிலையில் நேற்று கணவருடனான உறவை முறித்து கொள்ளப்போவதாக, நடிகை சமந்தா அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்தது.சமந்தாவும் நாக சைதன்யாவும் நேற்று தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தனர்.

மேலும் சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்க நாக சைதன்யாவின் குடும்பம் முன் வந்ததாகவும் அதை சமந்தா ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அளித்த ரூ.1 கோடி நிதிஉதவி !