பிரபல பாலிவுட் நடிகைக்கு சம்மன் !

சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது நடிகர்-மனைவி லீனா பால் ஆகியோருக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் சிவிந்தர் சிங்கின் குடும்பத்தை சுமார் ₹ 200 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகர் மற்றும் பால் ஏற்கனவே டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் வரும் 18 ம் தேதி விசரணைக்கு ஆஜராகும்படி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் க்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியாக ஜாக்குலின் விசாரிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : முன்னாள் பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை !