மீண்டும் சிறைக்கு சென்ற ஹேம்நாத்..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு கைது செய்யப்பட்டு ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 2015-ம் ஆண்டு ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கிக் கொடுப்பதாக கூறி ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஹேம்நாத் மீது ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் 2012ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு தான் ஹேம்நாத் மீது பண மோசடி, கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ஹேம்நாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர். 2012ஆம் ஆண்டு ஹேம்நாத் ஜெஜெ நகரை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி ஐந்து லட்ச ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மோசடி செய்து செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது ஹேம்நாத்திடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.